Chapter 080 - ஸூரத்து அபஸ


அத்தியாயம் - 80

ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

80:1. அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.

80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,

80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?

80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.

80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-

80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.

80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.

80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,

80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-

80:10.அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.

80:12.எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.

80:13.(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.

80:14. உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.

80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-

80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.

80:17.(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!

80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)

80:19.(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.

80:20.பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.

80:21.பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்" ஆக்குகிறான்.

80:22.பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.

80:23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.

80:24.எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.

80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.

80:26.பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-

80:27.பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.

80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-

80:29.ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -

80:30.அடர்ந்த தோட்டங்களையும்,

80:31. பழங்களையும், தீவனங்களையும்-

80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,

80:33.ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -

80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -

80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;

80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-

80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.

80:38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.

80:39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.

80:40.ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.

80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.

80:42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.