Chapter 103 - ஸூரத்துல் அஸ்ரி


அத்தியாயம் - 103

ஸூரத்துல் அஸ்ரி (காலம்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

103:1. காலத்தின் மீது சத்தியமாக.

103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).