Chapter 093 - ஸூரத்துள் ளுஹா


அத்தியாயம் - 93

ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

93:1. முற்பகல் மீது சத்தியமாக

93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை,; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.

93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.

93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?

93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.

93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.

93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.

93:10. யாசிப்போரை விரட்டாதீர்.

93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.