Chapter 113 - ஸூரத்துல் ஃபலக்


அத்தியாயம் - 113

ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).