Chapter 107 - ஸூரத்துல் மாஊன்


அத்தியாயம் - 107

ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

107:1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.