Chapter 101 - ஸூரத்து அல்காரிஆ


அத்தியாயம் - 101

ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

101:1.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).

101:2.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?

101:3.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?

101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.

101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-

101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.

101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-

101:9. அவன் தங்குமிடம் ''ஹாவியா"" தான்.

101:10. இன்னும் ('ஹாவியா") என்ன என்று உமக்கு அறிவித்தது எது?

101:11. அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.