tag:blogger.com,1999:blog-73423520905624752112024-02-08T03:39:39.524-08:00திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamilஇது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comBlogger115125tag:blogger.com,1999:blog-7342352090562475211.post-6026201692848754462009-11-19T05:03:00.000-08:002009-11-19T06:02:22.211-08:00Quran<br/><ul>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-001_16.html"> Chapter 001 - அல்ஃபாத்திஹா </a> - 7 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-002.html"> Chapter 002 - சூரத்துல் பகரா </a> - 286 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-003.html"> Chapter 003 - சூரத்துல் ஆல இம்ரான் </a> - 200 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-004.html"> Chapter 004 - சூரத்துன் னிஸா </a> - 176 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-005.html"> Chapter 005 - சூரத்துல் மாயிதா </a> - 120 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-006.html"> Chapter 006 - சூரத்துல் அன்ஆம் </a> - 165 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-007.html"> Chapter 007 - சூரத்துல் அஃராஃப் </a> - 206 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-008.html"> Chapter 008 - சூரத்துல் அன்ஃபால் </a> - 75 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-009.html"> Chapter 009 - சூரத்துத் தவ்பா </a> - 129 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-010.html"> Chapter 010 - ஸூரத்துத யூனுஸ் </a> - 109 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-011.html"> Chapter 011 - சூரத்துல் ஹூது </a> - 123 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-012.html"> Chapter 012 - சூரத்துல் யூஸூஃப் </a> - 111 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-013.html"> Chapter 013 - ஸூரத்துத் ரஃது </a> - 43 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-014.html"> Chapter 014 - ஸூரத்துத் இப்ராஹீம் </a> - 52 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-015.html"> Chapter 015 - ஸூரத்துல் ஹிஜ்ர் </a> - 99 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-016.html"> Chapter 016 - ஸூரத்துந் நஹ்ல் </a> - 128 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-017.html"> Chapter 017 - பனீ இஸ்ராயீல் </a> - 111 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-018.html"> Chapter 018 - ஸூரத்துல் கஹ்ஃபு </a> - 110 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-019.html"> Chapter 019 - ஸூரத்து மர்யம் </a> - 98 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-020.html"> Chapter 020 - ஸூரத்துத் தாஹா </a> - 135 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-021.html"> Chapter 021 - ஸூரத்துல் அன்பியா </a> - 112 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-022.html"> Chapter 022 - ஸூரத்துல் ஹஜ் </a> - 78 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-023.html"> Chapter 023 - ஸூரத்துல் முஃமினூன் </a> - 118 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-024.html"> Chapter 024 - ஸூரத்துந் நூர் </a> - 64 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-025.html"> Chapter 025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான் </a> - 77 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-026.html"> Chapter 026 - ஸூரத்துஷ் ஷுஹரா </a> - 227 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-027.html"> Chapter 027 - ஸூரத்துந் நம்லி </a> - 93 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-028.html"> Chapter 028 - ஸூரத்துல் கஸஸ் </a> - 88 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-029.html"> Chapter 029 - ஸூரத்துல் அன்கபூத் </a> - 69 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-030.html"> Chapter 030 - ஸூரத்துர் ரூம் </a> - 60 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-031.html"> Chapter 031 - ஸூரத்து லுக்மான் </a> - 34 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-032.html"> Chapter 032 - ஸூரத்துஸ் ஸஜ்தா </a> - 30 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-033.html"> Chapter 033 - ஸூரத்துல் அஹ்ஜாப் </a> - 73 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-034.html"> Chapter 034 - ஸூரத்துஸ் ஸபா </a> - 54 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-035.html"> Chapter 035 - ஸூரத்து ஃபாத்திர் </a> - 45 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-036.html"> Chapter 036 - ஸூரத்து யாஸீன் </a> - 83 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-037.html"> Chapter 037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத் </a> - 182 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-038.html"> Chapter 038 - ஸூரத்து ஸாத் </a> - 88 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-039.html"> Chapter 039 - ஸூரத்துஜ் ஜுமர் </a> - 75 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-040.html"> Chapter 040 - சூரத்துல் முஃமின் </a> - 85 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-041.html"> Chapter 041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா </a> - 54 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-042.html"> Chapter 042 - ஸூரத்துஷ் ஷுறா </a> - 53 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-043.html"> Chapter 043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப் </a> - 89 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-044.html"> Chapter 044 - ஸூரத்துத் துகான் </a> - 59 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-045.html"> Chapter 045 - ஸூரத்துல் ஜாஸியா </a> - 37 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-046.html"> Chapter 046 - ஸூரத்துல் அஹ்காஃப் </a> - 35 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-047.html"> Chapter 047 - ஸூரத்து முஹம்மது(ஸல்) </a> - 38 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-048.html"> Chapter 048 - ஸூரத்துல் ஃபத்ஹ் </a> - 29 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-049.html"> Chapter 049 - ஸூரத்துல் ஹுஜுராத் </a> - 18 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-050.html"> Chapter 050 - ஸூரத்து ஃகாஃப் </a> - 45 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-051.html"> Chapter 051 - ஸூரத்து(த்) தாரியாத் </a> - 60 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-052.html"> Chapter 052 - ஸூரத்துத் தூர் </a> - 49 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-053.html"> Chapter 053 - ஸூரத்துந் நஜ்ம் </a> - 62 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-054.html"> Chapter 054 - ஸூரத்துல் கமர் </a> - 55 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-055.html"> Chapter 055 - ஸூரத்துர் ரஹ்மான் </a> - 78 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-056.html"> Chapter 056 - ஸூரத்துல் வாகிஆ </a> - 96 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-057.html"> Chapter 057 - ஸூரத்துல் ஹதீத் </a> - 29 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-058.html"> Chapter 058 - ஸூரத்துல் முஜாதலா </a> - 22 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-059.html"> Chapter 059 - ஸூரத்துல் ஹஷ்ர் </a> - 24 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-060.html"> Chapter 060 - ஸூரத்துல் மும்தஹினா </a> - 13 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-061.html"> Chapter 061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு </a> - 14 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-062.html"> Chapter 062 - ஸூரத்துல் ஜுமுஆ </a> - 11 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-063.html"> Chapter 063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன் </a> - 11 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-064.html"> Chapter 064 - ஸூரத்துத் தகாபுன் </a> - 18 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-065.html"> Chapter 065 - ஸூரத்துத் தலாஃக் </a> - 12 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-066.html"> Chapter 066 - ஸூரத்துத் தஹ்ரீம் </a> - 12 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-067.html"> Chapter 067 - ஸூரத்துல் முல்க் </a> - 30 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-068.html"> Chapter 068 - ஸூரத்துல் கலம் </a> - 52 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-069.html"> Chapter 069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா </a> - 52 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-070.html"> Chapter 070 - ஸூரத்துல் மஆரிஜ் </a> - 44 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-071.html"> Chapter 071 - ஸூரத்து நூஹ் </a> - 28 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-072.html"> Chapter 072 - ஸூரத்துல் ஜின்னு </a> - 28 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-073.html"> Chapter 073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில் </a> - 20 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-074.html"> Chapter 074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர் </a> - 56 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-075.html"> Chapter 075 - ஸூரத்துல் கியாமா </a> - 40 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-076.html"> Chapter 076 - ஸூரத்துத் தஹ்ர் </a> - 31 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-077.html"> Chapter 077 - ஸூரத்துல் முர்ஸலாத் </a> - 50 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-078.html"> Chapter 078 - ஸூரத்துந் நபா </a> - 40 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-079.html"> Chapter 079 - ஸூரத்துந் நாஜிஆத் </a> - 46 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-080.html"> Chapter 080 - ஸூரத்து அபஸ </a> - 42 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-081.html"> Chapter 081 - ஸூரத்துத் தக்வீர் </a> - 29 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-082.html"> Chapter 082 - ஸூரத்துல் இன்ஃபிதார் </a> - 19 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-083.html"> Chapter 083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் </a> - 36 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-084.html"> Chapter 084 - ஸூரத்துல் இன்ஷிகாக் </a> - 25 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-085.html"> Chapter 085 - ஸூரத்துல் புரூஜ் </a> - 22 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-086.html"> Chapter 086 - ஸூரத்துத் தாரிஃக் </a> - 17 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-087.html"> Chapter 087 - ஸூரத்துல் அஃலா </a> - 19 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-088.html"> Chapter 088 - ஸூரத்துல் காஷியா </a> - 26 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-089.html"> Chapter 089 - ஸூரத்துல் ஃபஜ்ரி </a> - 30 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-090.html"> Chapter 090 - ஸூரத்துல் பலத் </a> - 20 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-091.html"> Chapter 091 - ஸூரத்துஷ் ஷம்ஸ் </a> - 15 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-092.html"> Chapter 092 - ஸூரத்துல் லைல் </a> - 21 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-093.html"> Chapter 093 - ஸூரத்துள் ளுஹா </a> - 11 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-094.html"> Chapter 094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ் </a> - 8 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-095.html"> Chapter 095 - ஸூரத்துத் தீன் </a> - 8 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-096.html"> Chapter 096 - ஸூரத்துல் அலஃக் </a> - 19 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-097.html"> Chapter 097 - ஸூரத்துல் கத்ரி </a> - 5 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-098.html"> Chapter 098 - ஸூரத்துல் பய்யினா </a> - 8 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-099.html"> Chapter 099 - ஸூரத்துஜ் ஜில்ஜால் </a> - 8 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-100.html"> Chapter 100 - ஸூரத்துல் ஆதியாத்தி </a> - 11 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-101.html"> Chapter 101 - ஸூரத்து அல்காரிஆ </a> - 11 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-102.html"> Chapter 102 - ஸூரத்துத் தகாஸூர் </a> - 8 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-103.html"> Chapter 103 - ஸூரத்துல் அஸ்ரி </a> - 3 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-104.html"> Chapter 104 - ஸூரத்துல் ஹூமஜா </a> - 9 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-105.html"> Chapter 105 - ஸூரத்துல் ஃபீல் </a> - 5 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-106.html"> Chapter 106 - ஸூரத்து குறைஷின் </a> - 4 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-107.html"> Chapter 107 - ஸூரத்துல் மாஊன் </a> - 7 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-108.html"> Chapter 108 - ஸூரத்துல் கவ்ஸர் </a> - 3 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-109.html"> Chapter 109 - ஸூரத்துல் காஃபிரூன் </a> - 6 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-110.html"> Chapter 110 - ஸூரத்துந் நஸ்ர் </a> - 3 - மதனீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-111.html"> Chapter 111 - ஸூரத்துல் லஹப் </a> - 5 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-112.html"> Chapter 112 - ஸூரத்துல் இஃக்லாஸ் </a> - 4 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-113_19.html"> Chapter 113 - ஸூரத்துல் ஃபலக் </a> - 5 - மக்கீ </li>
<li> <a href="http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-114_19.html"> Chapter 114 - ஸூரத்துந் நாஸ் </a> - 6 - மக்கீ </li>
</ul>Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-527923314302515202009-11-19T04:11:00.001-08:002010-06-05T04:07:31.760-07:00Chapter 114 - ஸூரத்துந் நாஸ்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 114<br /><br />ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)</b><br />
<br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)</div>
<br />
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.<br />
<br />
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;<br />
<br />
114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.<br />
<br />
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).<br />
<br />
114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.<br />
<br />
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-10836561874484896192009-11-19T04:09:00.001-08:002010-06-05T21:19:52.050-07:00Chapter 113 - ஸூரத்துல் ஃபலக்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 113<br /><br />ஸூரத்துல் ஃபலக் (அதிகாலை)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.<br /><br />113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-<br /><br />113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-<br /><br />113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,<br /><br />113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்). <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-18245242736940078122009-11-19T04:08:00.001-08:002010-06-05T21:20:39.075-07:00Chapter 112 - ஸூரத்துல் இஃக்லாஸ்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 112<br /><br />ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />112:1. (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.<br /><br />112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.<br /><br />112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.<br /><br />112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-14232387607181285522009-11-19T04:07:00.000-08:002010-06-05T21:20:52.647-07:00Chapter 111 - ஸூரத்துல் லஹப்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 111<br /><br />ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாடைக, அவனும் நாசமாகட்டும்.<br /><br />111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.<br /><br />111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.<br /><br />111:4.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,<br /><br />111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-16285409896573890112009-11-19T04:06:00.000-08:002010-06-05T21:21:17.057-07:00Chapter 110 - ஸூரத்துந் நஸ்ர்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 110<br /><br />ஸூரத்துந் நஸ்ர் (உதவி)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />110:1. அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,<br /><br />110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,<br /><br />110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் ''தவ்பாவை"" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-72631936089036206152009-11-19T04:03:00.001-08:002010-06-05T21:22:15.197-07:00Chapter 109 - ஸூரத்துல் காஃபிரூன்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 109<br /><br />ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />109:1. (நபியே!) நீர் சொல்வீராக: ''காஃபிர்களே!<br /><br />109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.<br /><br />109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.<br /><br />109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.<br /><br />109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.<br /><br />109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-16796756959687843122009-11-19T04:01:00.001-08:002010-06-05T21:22:42.525-07:00Chapter 108 - ஸூரத்துல் கவ்ஸர்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 108<br /><br />ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />108:1.(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.<br /><br />108:2.எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.<br /><br />108:3. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-11600434657214635832009-11-19T04:00:00.001-08:002010-06-05T21:23:07.438-07:00Chapter 107 - ஸூரத்துல் மாஊன்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 107<br /><br />ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)<br /></b><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />107:1. (நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?<br /><br />107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.<br /><br />107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.<br /><br />107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.<br /><br />107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.<br /><br />107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.<br /><br />107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-78787172142097500542009-11-19T03:59:00.000-08:002010-06-05T21:23:25.933-07:00Chapter 106 - ஸூரத்து குறைஷின்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 106<br /><br />ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,<br /><br />106:2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-<br /><br />106:3. இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.<br /><br />106:4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-83274933376374649382009-11-19T03:57:00.001-08:002010-06-05T21:23:43.178-07:00Chapter 105 - ஸூரத்துல் ஃபீல்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 105<br /><br />ஸூரத்துல் ஃபீல் (யானை)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />105:1.(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?<br /><br />105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?<br /><br />105:3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.<br /><br />105:4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.<br /><br />105:5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-38618401859344070692009-11-19T03:56:00.001-08:002010-06-05T21:24:03.999-07:00Chapter 104 - ஸூரத்துல் ஹூமஜா<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 104<br /><br />ஸூரத்துல் ஹூமஜா (புறங்கூறல்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />104:1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.<br /><br />104:2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.<br /><br />104:3. நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.<br /><br />104:4. அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.<br /><br />104:5. ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?<br /><br />104:6. அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.<br /><br />104:7. அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.<br /><br />104:8. நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.<br /><br />104:9. நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-22819073826263724442009-11-19T03:55:00.000-08:002010-06-05T21:24:24.114-07:00Chapter 103 - ஸூரத்துல் அஸ்ரி<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 103<br /><br />ஸூரத்துல் அஸ்ரி (காலம்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />103:1. காலத்தின் மீது சத்தியமாக.<br /><br />103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.<br /><br />103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-75235986900558437132009-11-19T03:53:00.001-08:002010-06-05T21:24:39.564-07:00Chapter 102 - ஸூரத்துத் தகாஸூர்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 102<br /><br />ஸூரத்துத் தகாஸூர் (பேராசை)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />102:1. செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-<br /><br />102:2. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.<br /><br />102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.<br /><br />102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.<br /><br />102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).<br /><br />102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.<br /><br />102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.<br /><br />102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-12890539165224167012009-11-19T03:51:00.001-08:002010-06-05T21:24:54.786-07:00Chapter 101 - ஸூரத்து அல்காரிஆ<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 101<br /><br />ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />101:1.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).<br /><br />101:2.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?<br /><br />101:3.திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?<br /><br />101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.<br /><br />101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.<br /><br />101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-<br /><br />101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.<br /><br />101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-<br /><br />101:9. அவன் தங்குமிடம் ''ஹாவியா"" தான்.<br /><br />101:10. இன்னும் ('ஹாவியா") என்ன என்று உமக்கு அறிவித்தது எது?<br /><br />101:11. அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-22472932583357696772009-11-18T04:05:00.001-08:002010-06-05T21:25:35.487-07:00Chapter 100 - ஸூரத்துல் ஆதியாத்தி<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 100<br /><br />ஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)</b><br />
<br />
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br />
</div>
<br />
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-<br />
<br />
100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,<br />
<br />
100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-<br />
<br />
100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,<br />
<br />
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-<br />
<br />
100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.<br />
<br />
100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.<br />
<br />
100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.<br />
<br />
100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-<br />
<br />
100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-<br />
<br />
100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-56753287749526923222009-11-18T04:04:00.001-08:002010-06-05T21:25:55.912-07:00Chapter 099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 99<br /><br />ஸூரத்துஜ் ஜில்ஜால் (அதிர்ச்சி)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />99:1. பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது<br /><br />99:2. இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-<br /><br />99:3. ''அதற்கு என்ன நேர்ந்தது?"" என்று மனிதன் கேட்கும் போது-<br /><br />99:4. அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.<br /><br />99:5. (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.<br /><br />99:6. அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.<br /><br />99:7. எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.<br /><br />99:8. அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-39750953885476019162009-11-18T04:02:00.000-08:002010-06-05T21:26:16.620-07:00Chapter 098 - ஸூரத்துல் பய்யினா<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 98<br /><br />ஸூரத்துல் பய்யினா (தெளிவான ஆதாரம்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />98:1. வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.<br /><br />98:2. (அத் தெளிவான ஆதாரம்) அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார் (என்பது).<br /><br />98:3. அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் வரையப்பட்டுள்ளன.<br /><br />98:4. எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான (இந்த) ஆதாரம் வந்த பின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை.<br /><br />98:5. ''அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.""<br /><br />98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.<br /><br />98:7. நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.<br /><br />98:8. அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-605584376777210632009-11-18T03:59:00.001-08:002010-06-05T21:26:35.168-07:00Chapter 097 - ஸூரத்துல் கத்ரி<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 97<br /><br />ஸூரத்துல் கத்ரி (கண்ணியமிக்க இரவு)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.<br /><br />97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?<br /><br />97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.<br /><br />97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.<br /><br />97:5. சாந்தி (நிலவியிருக்கும்),; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-66477026065500850942009-11-17T23:56:00.000-08:002010-06-05T21:26:53.245-07:00Chapter 096 - ஸூரத்துல் அலஃக்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 96<br /><br />ஸூரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.<br /><br />96:2. 'அலக்" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.<br /><br />96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.<br /><br />96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.<br /><br />96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.<br /><br />96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.<br /><br />96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,<br /><br />96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.<br /><br />96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?<br /><br />96:10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது,<br /><br />96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,<br /><br />96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,<br /><br />96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,<br /><br />96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?<br /><br />96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.<br /><br />96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,<br /><br />96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.<br /><br />96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.<br /><br />96:19. (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸூஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-27538322551044988452009-11-17T23:53:00.001-08:002010-06-05T21:27:13.336-07:00Chapter 095 - ஸூரத்துத் தீன்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 95<br /><br />ஸூரத்துத் தீன் (அத்தி)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-<br /><br />95:2. 'ஸினாய்" மலையின் மீதும் சத்தியமாக-<br /><br />95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-<br /><br />95:4.திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.<br /><br />95:5. பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.<br /><br />95:6. எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.<br /><br />95:7. எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?<br /><br />95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-35379266993628815592009-11-17T23:31:00.001-08:002010-06-05T21:27:28.768-07:00Chapter 094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 94<br /><br />ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />94:1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?<br /><br />94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.<br /><br />94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.<br /><br />94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.<br /><br />94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.<br /><br />94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.<br /><br />94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.<br /><br />94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக. <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-44836539279331596032009-11-17T23:29:00.001-08:002010-06-05T21:27:44.798-07:00Chapter 093 - ஸூரத்துள் ளுஹா<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 93<br /><br />ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />93:1. முற்பகல் மீது சத்தியமாக<br /><br />93:2. ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-<br /><br />93:3. உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை,; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.<br /><br />93:4. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.<br /><br />93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.<br /><br />93:6. (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?<br /><br />93:7. இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.<br /><br />93:8. மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.<br /><br />93:9. எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.<br /><br />93:10. யாசிப்போரை விரட்டாதீர்.<br /><br />93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-41339713031835518232009-11-17T23:28:00.001-08:002010-06-05T21:28:10.599-07:00Chapter 092 - ஸூரத்துல் லைல்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 92<br /><br />ஸூரத்துல் லைல் (இரவு)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />92:1. (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக<br /><br />92:2. பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-<br /><br />92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-<br /><br />92:4. நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.<br /><br />92:5. எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன்இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,<br /><br />92:6. நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,<br /><br />92:7. அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.<br /><br />92:8. ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,<br /><br />92:9. இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,<br /><br />92:10. அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.<br /><br />92:11. ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.<br /><br />92:12. நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.<br /><br />92:13. அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.<br /><br />92:14. ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.<br /><br />92:15. மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.<br /><br />92:16. எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.<br /><br />92:17. ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.<br /><br />92:18. (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.<br /><br />92:19. மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.<br /><br />92:20. மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).<br /><br />92:21. வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.<br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7342352090562475211.post-23541861699102205192009-11-17T23:27:00.000-08:002010-06-05T21:28:27.980-07:00Chapter 091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்<div style="text-align: center;">
<b>அத்தியாயம் - 91<br /><br />ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)</b><br /><br />அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)<br /></div>
<br />91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக<br /><br />91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-<br /><br />91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-<br /><br />91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-<br /><br />91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-<br /><br />91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-<br /><br />91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-<br /><br />91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.<br /><br />91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தோர்.<br /><br />91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.<br /><br />91:11. 'ஸமூது" (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.<br /><br />91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,<br /><br />91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: ''இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்"" என்று கூறினார்.<br /><br />91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.<br /><br />91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை. <br />Mohamed Yousufhttp://www.blogger.com/profile/15600646914033733054noreply@blogger.com